நாட்குறிப்பின் மேல்
இருந்தது அந்தச் சிறு இறகு.
மிஞ்சிப் போனால்
ஒரு அகத்தி இலை அளவு
இருக்கும்.
இறகுக் காம்பில் சற்று வெள்ளை
மேலே பொட்டு வைத்தது போலக்
கரும் பழுப்பு.
கிடைக்காதது கிடைத்தது என
என் ரசனையின் கொண்டையில்
செருகிக் கொண்டேன் ஒன்றிரண்டு விநாடிகள்
அத்துடன் அது முடிந்தது.
அப்புறம்
இதை உதிர்த்த அல்லது
அதை இழந்த
பறவையைப் பற்றிய
யோசனையில்
ஒரு வித பாரம்
வானத்திலிருந்து என்னைக்
கீழ் இழுத்துக் கொண்டிருந்தது.
ஏதேனும் ஒரு
அடர்ந்த மரத்தின் கிளையில்
என்னைக் கொண்டு சேர்க்குமெனில்
கொஞ்சம் ஆசுவாசமாக இருப்பேன்.
-கல்யாண்ஜி
மழையில் பாதி கரைந்த ஓவியம் எனது வாழ்க்கை. ஞாபகங்களால் அதைப் பூர்த்தி செய்வதாகப் பாவனை செய்துகொண்டிருக்கிறேன்.
Tuesday, September 22, 2009
பாடல் முயற்சி ஒன்று
ஒற்றைப் புல்லாங்குழல் ஒன்று
தெருவின் முனையில் கரைகிறது
உயிரைக் கொல்லும் குரலொன்றில்
கவிதை மிதந்து வருகிறது
இரவில் குளிரில் நான் நின்றால்
எதுவோ இதமாய் சுடுகிறது
எல்லாம் நீதான் நானறிவேன்
இருந்தும் இறங்கி வரமாட்டேன்
(கோரஸ்)
காதல் மட்டும் போதாது
கனவை உண்ண முடியாது
வானம் கூரை எனச் சொல்லி
வாழ்ந்து தீர்க்க முடியாது
மழையின் குரலில் ஒரு பாடல்
நீர்ச்சரமாய் வழிய நான் கேட்டேன்
இழையும் குழையும் அது நெஞ்சில்
இருந்தும் ஒரு சொல் தரமாட்டேன்
உருகி மருகிப் பேசுகிறாய்
உயிருள் அனலை வீசுகிறாய்
பெருகும் எனக்கும் காதல் வலி
இருந்தும் நம்பிக்கை தரமாட்டேன்
(கோரஸ்)
காதல் மட்டும் போதாது
கனவை உண்ண முடியாது
வானம் கூரை எனச் சொல்லி
வாழ்ந்து தீர்க்க முடியாது
உயரம் சிகரம் நீ தொடுவாய்
ஒருநாள் திரும்பி நீ வருவாய்
இதயம் ஒளித்துக் காத்திருப்பேன்
எனை இழக்காமல் வழி பார்த்திருப்பேன்
காற்றில் அலையும் சிறகொன்று
கையில் வந்து படிவதுபோல்-உன்
மார்பில் வந்து நான் விழுவேன்
மரணம்போல நான் அழுவேன்
(கோரஸ்)
காதல் மட்டும் போதாது
கனவை உண்ண முடியாது
வானம் கூரை எனச் சொல்லி
வாழ்ந்து தீர்க்க முடியாது
தெருவின் முனையில் கரைகிறது
உயிரைக் கொல்லும் குரலொன்றில்
கவிதை மிதந்து வருகிறது
இரவில் குளிரில் நான் நின்றால்
எதுவோ இதமாய் சுடுகிறது
எல்லாம் நீதான் நானறிவேன்
இருந்தும் இறங்கி வரமாட்டேன்
(கோரஸ்)
காதல் மட்டும் போதாது
கனவை உண்ண முடியாது
வானம் கூரை எனச் சொல்லி
வாழ்ந்து தீர்க்க முடியாது
மழையின் குரலில் ஒரு பாடல்
நீர்ச்சரமாய் வழிய நான் கேட்டேன்
இழையும் குழையும் அது நெஞ்சில்
இருந்தும் ஒரு சொல் தரமாட்டேன்
உருகி மருகிப் பேசுகிறாய்
உயிருள் அனலை வீசுகிறாய்
பெருகும் எனக்கும் காதல் வலி
இருந்தும் நம்பிக்கை தரமாட்டேன்
(கோரஸ்)
காதல் மட்டும் போதாது
கனவை உண்ண முடியாது
வானம் கூரை எனச் சொல்லி
வாழ்ந்து தீர்க்க முடியாது
உயரம் சிகரம் நீ தொடுவாய்
ஒருநாள் திரும்பி நீ வருவாய்
இதயம் ஒளித்துக் காத்திருப்பேன்
எனை இழக்காமல் வழி பார்த்திருப்பேன்
காற்றில் அலையும் சிறகொன்று
கையில் வந்து படிவதுபோல்-உன்
மார்பில் வந்து நான் விழுவேன்
மரணம்போல நான் அழுவேன்
(கோரஸ்)
காதல் மட்டும் போதாது
கனவை உண்ண முடியாது
வானம் கூரை எனச் சொல்லி
வாழ்ந்து தீர்க்க முடியாது
நல்வரவை வேண்டும் புதுவரவு
என் பெயர் சில்வியா. அழகில் கிளியோபாட்ரா இல்லை. கவிதையில் சில்வியா பிளாத் இல்லை. கருணையில் அன்னை தெரேசா இல்லை. துணிவில் தஸ்லிமா நஸ்ருதீன் இல்லை. அடையாளமற்றுத் தெருவில் கடந்துபோகக்கூடிய கோடானுகோடி சாதாரண பெண்களில் ஒருத்தி. நிறைய வாசிப்பவள். சகமனிதரை நேசிப்பவள். வலைப்பூவொன்றை அமைத்து எழுதவந்திருக்கிறேன்.
முடிந்தவரை மொக்கை போடாமலிருக்க முயற்சிக்கிறேன். ஜல்லியடிக்காதிருக்க விளைகிறேன். ஜால்ராவைத் தவிர்க்கப் பார்க்கிறேன். இணைய அரட்டையின்போது எனது நண்பர்களிலொருவன் சொன்னான் "நீயொரு துணிச்சல்காரி"என்று. நான் சொன்னேன் "இல்லை... நானொரு கலகக்காரி"என்று. மரபார்ந்த சமுதாயத்தில் ஊறிப்போயிருக்கும் அனைத்து பிற்போக்கான சிந்தனைகளுக்குமெதிராகக் கலகக்குரல் எழுப்புவதே என் விருப்பம்.
'வா'என்று சொன்னால் மகிழ்வேன். 'வராதே'என்று சொன்னாலும் முகம்சுளியேன். 'கெத்தாக'வந்திருப்பதாக நினைக்கிறீர்கள் இல்லையா...? இந்த 'கெத்து'ம் இல்லையென்றால் எங்களைப் போன்ற பெண்களின் சத்தம் கேட்பதேது?
-சில்வியா
முடிந்தவரை மொக்கை போடாமலிருக்க முயற்சிக்கிறேன். ஜல்லியடிக்காதிருக்க விளைகிறேன். ஜால்ராவைத் தவிர்க்கப் பார்க்கிறேன். இணைய அரட்டையின்போது எனது நண்பர்களிலொருவன் சொன்னான் "நீயொரு துணிச்சல்காரி"என்று. நான் சொன்னேன் "இல்லை... நானொரு கலகக்காரி"என்று. மரபார்ந்த சமுதாயத்தில் ஊறிப்போயிருக்கும் அனைத்து பிற்போக்கான சிந்தனைகளுக்குமெதிராகக் கலகக்குரல் எழுப்புவதே என் விருப்பம்.
'வா'என்று சொன்னால் மகிழ்வேன். 'வராதே'என்று சொன்னாலும் முகம்சுளியேன். 'கெத்தாக'வந்திருப்பதாக நினைக்கிறீர்கள் இல்லையா...? இந்த 'கெத்து'ம் இல்லையென்றால் எங்களைப் போன்ற பெண்களின் சத்தம் கேட்பதேது?
-சில்வியா
Subscribe to:
Posts (Atom)